தமிழீழம்,

தமிழீழம்,

Friday, June 3, 2011

தஞ்சையில் உருவாகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! கவிஞர் காசி ஆனந்தன் வேண்டுகோள்!

இராசராசசோழன் தஞ்சையில் மாபெரும் கற்கோயிலை எழுப்பினான். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அது கம்பீரமாகக் காட்சி தருகிறது. தமிழர்களின் சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அதே தஞ்சையில் முள்ளிவாய்க்காலில் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாக மற்றொரு கற்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது
,

ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 ஈகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு வருகிறது.

இராசராசன் எழுப்பிய தஞ்சைக் கற்கோயிலுக்குப் பயன்படுத்திய அதே ரக கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும் பொருட் செலவில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

50 தொன்னிற்கு மேலான எடையும் 40 அடி நீளமும் 10 அடி உயரமும் 3 அடி கனமும் கொண்ட பெரும் கற்களில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்பிகள் இரவு பகலாக அற்புதமான சிற்பங்களைச் செதுக்கி வருகிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் படுகொலையாகி வீழ்ந்து கிடக்கும் மக்களின் அவலக் காட்சியும், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுப் புலம்பும் மக்களின் துயரக் காட்சியும், முத்துக்குமார் உட்பட தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் உயிர்த் தியாகம் செய்த ஈகிகளின் சிலைகளும் செதுக்கப்பட்டு வருகின்றன.

ஓவிய மண்டபம் ஒன்றும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டு இங்கு வைக்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை இத்தகைய சிற்ப நினைவகம் அமைக்கப்பட்டதில்லை என்று சொல்லுமளவிற்கு இது உருவாக்கப்பட்டு வருகிறது. அழியாமல் நின்று ஆயிரமாயிரம் மக்களின் துயரத்தைத் தமிழர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக நினைவூட்டும் வகையில் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த மாபெரும் பணியில் உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பு விரும்புகிறது. வேண்டுகிறது.

கவிஞர் காசி ஆனந்தன் வேண்டுகோள்

இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே!

2009 மே 17-18 ல் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக தமிழ்நாட்டில் - தஞ்சையில் - கருங்கல் சிற்பங்களால் அமைந்த மிகப்பெரிய நினைவுச் சின்னம் ஒன்றினை உருவாக்கும் பணியில் உலகத் தமிழர் பேரமைப்பு ஈடுபட்டுள்ளது. இதற்கான சிற்ப வேலைகளில் நூற்றுக்கும் அதிகமான தமிழகச் சிற்பக் கலைஞர்கள் உழைத்து வருகிறார்கள்.

நினைவுக் கூடம் ஒன்றை உள்ளடக்கியதாய் அமையும் இந்த 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்' - முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த சிங்கள இனவெறிக் கொடுமைகள் - கொன்று குவிக்கப்பட்ட தமிழர் துயரங்களோடு - தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்கால் போரின் கொடுமைகளுக்கு எதிராகத் தீக்குளித்து மடிந்த மாவீரர்களுக்கும் சிலைகள் நிறுவப்படுகின்றன.

தமிழீழத்தையும் - தமிழ் நாட்டையும் என்றென்றும் இணைக்கும் உறவுப் பாலமாக தஞ்சையில் தலை நிமிரும் முள்ளிவாய்க்கால் நினைவகம் திகழும்.

தமிழீழத்தில் நமது மாவீரர்களின் கல்லறைகள் - சிலைகள் - நினைவுச் சின்னங்கள் அனைத்தும் தகர்த்து அழிக்கப்பட்டன. தமிழ் நாட்டில் அமையும் 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' உலகத் தமிழர் அனைவரையும் தட்டி எழுப்பும் வரலாற்றுத் தீப்பொறியாய் நின்று - சிங்கள இனவெறியர் சூழ்ச்சிகளைத் தகர்த்து அழிக்கும்.

இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே!

தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவும் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு - உங்களால் இயன்ற நிதி உதவி தந்து துணை நில்லுங்கள்.

இதையும் நமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு சிறு தொடர் நிகழ்வாய்க் கருதி இன்றே தோள் கொடுப்போம்

உங்கள் நிதி - தமிழீழ விடுதலைக் களத்தில் உயிர் சிந்திய போராளிகள் - பொதுமக்கள் - தமிழ்நாட்டில் அவர்களுக்காய் உயிர் கொடுத்த நெருப்பு மேனிகள் - மீண்டும் உயிர்ச் சிலைகளாய் நிமிர உதவும்.

நன்றி!

காசி ஆனந்தன்
தமிழீழம்

நிதி அனுப்ப வேண்டிய முகவர்

பழ. நெடுமாறன்
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு
58, மூன்றாவது முதன்மைச் சாலை,
ஆழ்வார் திருநகர் விரிவாக்கம்,
சென்னை-600 087.
தொலைபேசி : 23775536, தொலைநகல் : 23775537,
மின்னஞ்சல் : thamiz@thenseide.com

வங்கிக் கணக்கு விவரம்:

உலகத் தமிழர் பேரமைப்பு (World Tamil Confederation)
கணக்கு எண் : 457022479
இந்தியன் வங்கி, மயிலாப்பூர் கிளை.
சென்னை - 600 004.

ஓர் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட வேண்டும் .....

http://wwஅன்பின் ஜனாதிபதி ஒபாமா அவர்களே,


அண்மையில் தென் சூடானில் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பில் சுதந்திர தென்சூடானை ஆதரித்துப் பொதுமக்கள் அமோகமாக வாக்களித்திருந்தனர். தென் சூடான் மக்களுக்கு இப் பொதுசன வாக்கு மூலம் சாத்தியமாகும் இறைமையை நாம் அங்கீகரித்து ஆதரிக்கின்றோம். இதனால் முக்கியமான இரு விடயங்கள் நிறைவேறுகின்றன. முதலாவதாக தென் சூடான் மக்களுக்குத் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பும் அமைதியும் கிட்டுகின்றது. இரண்டாவதாகப் பல வருடங்களாக நீடித்த பயங்கரப் போர் முடிவுக்கு வந்துள்ளது.

தென் சூடானில் இடம்பெற்றதைப் போன்றே இலங்கையிலும் ஓர் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். சூடானைப் போன்றே பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பயங்கரப் போரில் இலங்கை அரசு நாதியற்ற சிறுபான்மை இனத்தைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்றொழித்தது. தென் சூடானிய மக்களைப்போன்றே இலங்கைத் தமிழர்களும் பாதுகாப்புடன் சுதந்திரமாக வாழ இறைமையுடன் கூடிய தனி நாடு இன்றியமையாததாகும். எண்ணற்ற சிறுபான்மைத் தமிழ் இனத்தவரைக் கொன்றொழித்ததுடன் அவர்களைப் பல இன்னல்களுக்கும் ஆளாக்கியது.

இலங்கையில் யுத்த அனர்த்தம் சார்ந்த பொறுப்பேற்பு சம்பந்தமாக ஆராய ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பெற்ற நிபுணர் குழுவின் அறிக்கை 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 25ந் தேதி வெளியாகியது. அவ்வறிக்கையில் இலங்கை அரசிற்கெதிரான மேல் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.


1. பரவலான சரமாரிக் குண்டு வீச்சுக்குப் பொது மக்கள் பலியாக்கப் பட்டது
2. மருத்துவ மனைகளும் மக்கள் சேவை மையங்களும் குண்டுவீசித் தாக்கப் பட்டமை
3. மக்களுக்கு மனிதாபிமான உதவி மறுக்கப்பட்டமை
4. இடம் பெயர்ந்த மக்களுக்கும் விடுதலைப் புலி உறுப்பினருக்கும் எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள்
5.போர்க்களத்திற்குப் புறத்தே பத்திரிகையாளர்களுக்கும் அரசிற்கு முரணானவர்களுக்கும் ஏதிரான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டமை

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடைபெறவேண்டுமென இவ்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கீழே கைச்சாத்திட்டிருக்கும் நாம் இலங்கையில் தமிழ் மக்களுக்குத் தங்கள் சொந்தப் பிரதேசத்தில் இறைமையுடன் கூடிய சுய ஆட்சி அமைய வேண்டுமா எனும் வினாவிற்கு விடை அளிக்கக்கூடிய பொதுசன வாக்nகுடுப்பு ஒன்று இடம்பெறுவதற்கு அமெரிக்காவின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
w.tamilsforobama.com/Referendum2011/tamil.asp

ஓர் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட வேண்டும் .....

அன்பின் ஜனாதிபதி ஒபாமா அவர்களே,


அண்மையில் தென் சூடானில் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பில் சுதந்திர தென்சூடானை ஆதரித்துப் பொதுமக்கள் அமோகமாக வாக்களித்திருந்தனர். தென் சூடான் மக்களுக்கு இப் பொதுசன வாக்கு மூலம் சாத்தியமாகும் இறைமையை நாம் அங்கீகரித்து ஆதரிக்கின்றோம். இதனால் முக்கியமான இரு விடயங்கள் நிறைவேறுகின்றன. முதலாவதாக தென் சூடான் மக்களுக்குத் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பும் அமைதியும் கிட்டுகின்றது. இரண்டாவதாகப் பல வருடங்களாக நீடித்த பயங்கரப் போர் முடிவுக்கு வந்துள்ளது.

தென் சூடானில் இடம்பெற்றதைப் போன்றே இலங்கையிலும் ஓர் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். சூடானைப் போன்றே பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பயங்கரப் போரில் இலங்கை அரசு நாதியற்ற சிறுபான்மை இனத்தைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்றொழித்தது. தென் சூடானிய மக்களைப்போன்றே இலங்கைத் தமிழர்களும் பாதுகாப்புடன் சுதந்திரமாக வாழ இறைமையுடன் கூடிய தனி நாடு இன்றியமையாததாகும். எண்ணற்ற சிறுபான்மைத் தமிழ் இனத்தவரைக் கொன்றொழித்ததுடன் அவர்களைப் பல இன்னல்களுக்கும் ஆளாக்கியது.

இலங்கையில் யுத்த அனர்த்தம் சார்ந்த பொறுப்பேற்பு சம்பந்தமாக ஆராய ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பெற்ற நிபுணர் குழுவின் அறிக்கை 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 25ந் தேதி வெளியாகியது. அவ்வறிக்கையில் இலங்கை அரசிற்கெதிரான மேல் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.


1. பரவலான சரமாரிக் குண்டு வீச்சுக்குப் பொது மக்கள் பலியாக்கப் பட்டது
2. மருத்துவ மனைகளும் மக்கள் சேவை மையங்களும் குண்டுவீசித் தாக்கப் பட்டமை
3. மக்களுக்கு மனிதாபிமான உதவி மறுக்கப்பட்டமை
4. இடம் பெயர்ந்த மக்களுக்கும் விடுதலைப் புலி உறுப்பினருக்கும் எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள்
5.போர்க்களத்திற்குப் புறத்தே பத்திரிகையாளர்களுக்கும் அரசிற்கு முரணானவர்களுக்கும் ஏதிரான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டமை

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடைபெறவேண்டுமென இவ்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கீழே கைச்சாத்திட்டிருக்கும் நாம் இலங்கையில் தமிழ் மக்களுக்குத் தங்கள் சொந்தப் பிரதேசத்தில் இறைமையுடன் கூடிய சுய ஆட்சி அமைய வேண்டுமா எனும் வினாவிற்கு விடை அளிக்கக்கூடிய பொதுசன வாக்nகுடுப்பு ஒன்று இடம்பெறுவதற்கு அமெரிக்காவின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

Wednesday, May 18, 2011

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி.

தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் .அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்!


அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..?என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைதது.அரசியலில் நேர்மை,தூய்மை,அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக்கொண்டவரல்லவா..?


‘’ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது.எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி பரபரக்க வைத்தார்.இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா..?விட்டுவிடக்கூடாது...என்று நீதிமன்றத்துக்கும் போனார்...பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்..

பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.கவினருக்கே வெளிச்சம்.செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க,அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதாகவும் நடந்தேறியது..என்ற பழைய வரலாற்றை ஒரு நேர்காணலில் போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான திருச்சி வேலுசாமி.

சரி.41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்.....

எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ...எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ...,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று த்னது தன்மானத்தோடும் மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த ,மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட்டார்..ஊர் அறிய உலகறிய!

Tuesday, May 17, 2011

ஐநாவின் முன்றலில் அணிதிரளத் தயாராகும் தமிழனம் :!!:

எதிர்வரும் மே-18 புதன்கிழமை நியூ யோர்க் - ஜெனீவா ஐ.நா பீடங்களுக்கு முன்னால் அணிதிரள ஐரோப்பா - அமெரிக்கா வாழ் தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.
ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த மாபெரும் ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுவருகின்றன.
கடந்த காலங்களில் ஐநாவுக்கு முன்னால் அணிதிரண்டதற்கும் இந்த ஒன்றுகூடலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
கடந்த காலங்களில் நாங்கள் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியில் இன்று எடுத்துரைத்தோம். ஆனால் இன்று நிபுணர் குழுவின் அறிக்கையே உண்மையின் சாட்சியமாக ஐநாவுக்குள்ளேயே உள்ள நிலையில் அதனை முன்நகர்த்த வேண்டிய பொறுப்பு எங்கள் கைகளிலும் உள்ளதென துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் தெரிவித்தார்.
இந்த ஒன்றுகூடலில் பங்கெடுப்பதற்குரிய பேருந்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
நியூயோர்க்கில் கலந்து கொள்வதற்கான பயண ஒழுங்குகளுக்கு : 416 291 7474 - 647 822 8062 - 514 400 6970 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு கனடா வாழ் தமிழர்கள் தொடர்பு கொள்ளுமாறும் ஐரோப்பிய வாழ் தமிழர்கள் கீழ் வருகின்ற தொடர்பிலக்கங்களோடு தொடர்பு கொண்டு பயண விபரங்களை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
பிரான்ஸ் : 06 66 90 06 08 - 06 62 36 50 07
பிரித்தானியா : 0208 470 6655 - 0791 220 6171
சுவிஸ் : 076 541 63 26 - 078 850 90 22

Monday, May 16, 2011

ஈழத் தமிழரின் கண்ணீரை துடைக்கும்வரை பட்டம் வேண்டாம்

2009 ல் ஈழத் தமிழரின் கண்ணீரை துடைக்கும்வரை பட்டம் வேண்டாம் என்று பட்டம் வாங்க மறுத்த சுமதியிடம் பெறப்பட்ட பேட்டியை மீண்டும் படிக்கும் போது எனக்குள் வேகம் வரும்... அதை அப்படியே உங்கள் முன் வைத்திருக்கிறேன்...


கடந்த 22/3/2009 தேதி அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 43 வது பட்டமளிப்பு விழா கல்லூரியில் நடைபெற்றது.மொத்தம் 288 மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைகத்தின் துணைவேந்தர் பொன்னவைக்கோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த நாடு வல்லரசாக வேண்டுமானால் இளைஞர்களின் மனதுவைத்தால் தான் முடியும் ஆக இளைஞர்கள் இந்த நாட்டின் நட்சத்திரங்கள் என பேசிவிட்டு மாணவர்களுக்கு பட்டமளித்துக்கொண்டு இருக்கும் போது அதே கல்லூரியில்Bsc(zoo) படித்து முடித்த சுமதியை பட்டமளிக்க மேடைக்கு வந்த சுமதி அழுதுகொண்டு இலங்கையில் எமது சொந்தங்கள் கொல்லப் பட்டுகொண்டிருக்கும் போது இங்கு சந்தோசமாக பட்டத்தை வாங்கி அதை கொண்டாட முடியாது எனவே எனக்கு பட்டம் வாங்க விருப்பமில்லைன்னு சொல்லிவிட்டு போக அனைவருக்கும் பேரதிர்ச்சி,

நாம் சுமதியை அரியலூர் மாவட்டம், செந்துறை ரோட்டில் 7கி.மீ உள்ள ஓட்டக்கோயில் கிராமத்தில் பெரியார் சிந்தனை உள்ள குடும்பத்தில் (அப்பா தங்க‌வேல்(57வயசு)அம்மாயில்லை, அண்ணன்செந்தில் bsc grduate) பிறந்த சுமதிக்கு 6 மாதத்துக்கு முன் தான் கொத்தவாசலை சேர்ந்த முத்தமிழ் செல்வனுக்கு திருமணம் முடிஞ்சிருக்கு.இப்ப அரியலூர் அரசு கலைக்கல்லூரியிலயே Msc(environmental secience)படிக்கிரார் அவரை மானமும், அறிவும் மனிதனுக்கும் அழகுயென வாசக்காலில் எழுதப்பட்டிருந்த, அவரின் கூரைவீட்டில் சந்திதோம்..
இன்னைக்கு 120, நேற்று 140 என போன மூனு மாசத்தில பத்தாயிரத்துக்குமெல தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிராங்க‌, தமிழர்களின் உயிரிழப்புகளை கணக்கு பண்ணிக்கிக்கிட்டேயிருக்கிறோம், இங்கயிருக்கிவங்க இளைஞர்களின் கையிலதான் நாட்டின் எதிர்காலமிருக்குன்னு சொல்லுராங்க ஆனா இங்க அப்படி எதுவுமில்லை, என் பேரை பட்டம் வாங்க கூப்பிட்டாங்க,மேடைக்கு போகும்போதே என்னால போகமுடியல, அதனால மேடையிலயே அழுதுக்கிட்டு, இலங்கையில் தமிழர்கள் கொல்லப் பட்டுகொண்டிருக்கும் போது அதற்க்கு தீர்வுகாணாது பட்டம் வாங்க விருப்பமில்லைன்னு, சந்தோசமாக பட்டத்தை வாங்கி அதை கொண்டாடமுடியாது எனவே எனக்கு பட்டம் வாங்க விருப்பமில்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.அதுக்கப்புறம் எல்லாம் முடிஞ்சி பிரின்ஸ்பால் ரூம்ல என்னை கூப்பிட்டு துனைவேந்தர்,பிரின்ஸ்பால் எல்லாம் சேர்ந்து,ரொம்ப நேரம் பேசி சர்ட்டிபிக்கட் தந்து அனுப்பிட்டாங்க எனும் போதே கண்களில் கண்ணீர் ததும்ப அங்கிருந்து விடைபெற்றோம்.

கல்லூரி நிர்வாகத்திடம் பேசினோம். முதல அந்த பொண்ணு வாங்கல அப்புறம் கடைசியா வாங்கிட்டு போயிடிச்சி என்றனர்.

முத்துக்குமார் பற்றவைத்த தீ
இன்னும் இளைஞ்ர்களின் இதயத்திலிருந்து அணையவில்லை இலங்கை தமிழருக்கு நீதி கிடைக்கும்வரை அந்த தீ அணையாது போல....


சுமதியை மீண்டும் சந்தித்தேன்.. இன்னமும் அதே துடிப்புடன் இருப்பதை கண்டு பெருமிதம் கண்டேன் அதனால் தான் இக்கட்டுரையை பிரசுரம் செய்கிறேன். சுமதி போன்ற மாணவர்களால் தான் மாற்றம் நிச்சயம்

Wednesday, May 11, 2011

கார்திகைப்பூ

எனது பெயர் கார்திகைப்பூ  எனக்கோ பல பெயர்கள் உண்டு.. காந்தல் அக்கினி கலசம் என பல நாமங்கள் உண்டு.. பண்டைய காலத்திலே எனக்கு மதிப்பு அதிகமாம்.. போர் கடவுளாம் முருக பெருமானின் மலரும் கார்த்திகைப் பூவே.... கரிகாலன் கரங்களில் மலர்ந்ததும் காந்தள் பூவே.. நான் ஒ...ற்றை விதை தாவரத்தில் இருந்து பிறந்தவள்.. இலை நுணிகள் நீண்டு சுருண்டு பற்று கம்பிகள் போல் படர்ந்து விரிவேன்.. நான் அகள் விளக்கு போல் ஆறு இதழ் கொண்டு காட்சி கொடுப்பேன்... வெண்காந்தள் செங்காந்தள் என்றும் வர்ணிப்பார்கள்.... தீச் சுவாலை போல் காட்சி அளிப்பதாள் அக்கினி கலசம் தலைச்சுருளி என்றும் அழைப்பார்.... நான் வலைந்து பற்றுவதால் கோடல் கோடை என்றும் செல்லமாக அழைப்பார்... வைத்தியர்கள் என்னை வெண் தோண்டி என்று கூறுவார்... நான்கு விரல் போலவும் சுடர் போலவும் காட்சி கொடுப்பேன்.... தமிழீழ தேசிய தலைவர் அவர்களால் நான் போற்றப்பட்டேன்... எனக்கென்று ஒரு நாடு உண்டு... கொடி உண்டு ... தேசிய கீதம் உண்டு... தலைவன் உண்டு... மக்கள் உண்டு... இப்படி என்று பல கெளரவிப்புகளுடன் தமிழீழத்தில் அவதரித்தேன்.... என்னை தமிழீழத்தின் தேசிய மலராக பிரகடணப் படுத்தப்பட்டது... நான் தேசிய கொடியின் வர்ணங்களை ஒத்தே இருக்கின்றேன்... நான் பூக்களில் காந்தள் பூவாக பிறந்ததிற்கு பெருமை கொள்கின்றேன்... மாவீரர் செல்வங்களின் கல்லறைகளை பூஜிப்பதில் பெரும் பாக்கியம்

Wednesday, May 4, 2011

05-05-2011 -தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது 35 வது அகவையை நிறைவுசெய்கிறது.

05-05-2011 -தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது 35 வது அகவையை நிறைவுசெய்கிறது. அடுத்த தலைமுறையாவது விடுதலைக்காற்றினை சுவாசிக்கவேண்டுமென்ற உயரிய நோக்கோடு - நெருப்பினில் நீராடி, வீழ்ந்து, விதையான வீரவேங்கைகளுக்கு கண்ணீர் கலந்த வீர வணக்கம்.

Tuesday, May 3, 2011

கனடாவில் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ராதிகா சிற்சபைஈசன் வெற்றி பெற்று பாராளுமன்று செல்லும் முதல் தமிழராகத் இடம்பெற்றுள்ளார்...

கனடாவில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் கண்சவெட்டிவ் கட்சி பெரும்பாண்மை அரசை அமைத்துள்ளது. இத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ராதிகா சிற்சபைஈசன் வெற்றி பெற்று பாராளுமன்று செல்லும் முதல் தமிழராகத் இடம்பெற்றுள்ளார் 
இரண்டு ஆண்டுகளின் முன் எம் மக்கள் கொத்துகொத்தாய் கொல்லப்பட நாங்கள் ஒரு லட்சம் தமிழர்கள் கனடிய நாடாளுமன்றத்தின் முன் திரண்டு அழுதோம். கதறினோம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட வெளியே வந்தும் பார்க்கவில்லை. இன்று இம்மாதம் முள்ளிவாய்க்கால் மனிதப...் பேரவலத்தின் இரண்டாம் ஆண்டினை நினைவுகூரும் தருணம் எங்களில் ஒருவரே நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது மகிழ்வைத் தருகிறது. ராதிகாவின் வெற்றி கனடியத் தமிழர்களின் ஒற்றுமை உணர்வின் வெற்றி.....

Thursday, April 28, 2011

உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை ஒன்றை முன்வைக்கவேண்டும்

சிரியாவில் மனித உரிமை மீறல் நடைபெற்றதாகக் கூறி, அவ்வழைப்பை ரத்துச் செய்த ராஜ குடும்பம், இலங்கை நிலை குறித்தும் அறிந்திருக்கவேண்டும். எனவே இலங்கைத் தூதுவருக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பை சிரியா போல ரத்துச்செய்யவேண்டும் என பிரித்தானியா வாழ் மக்கள் மட்டுமல்லாது, உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை ஒன்றை முன்வைக்கவேண்டும். திருமண விழா நாளை நடைபெறவுள்ளதால், மக்கள் விரைந்துசெயல்படுவது நல்லது. சென் ஜேம்ஸ் மாளிகையின் தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் மற்றும் முகவரிகள் இங்கே தரப்பட்டுள்ளது.
(+44) (0)20 7930 4832.
(+44) (0)20 7930 4832.
webeditor@royal.gsx.gov.uk
support@royal.gsx.gov.uk

புதைந்த நீங்கள் மீண்டும் எழுவீர்..!!

புதைந்த நீங்கள் மீண்டும் எழுவீர்..!!

     
மண்ணுக்குள் தூங்கும்
எம் வீரர்களே
விழியில்
எதிரியைத் தேடி
களத்துள் புகுந்தீர்கள்..!
எதிரியின் காவலரணை
எரித்தீர்கள்
வீறுடன் எதிரியின்
துப்பாக்கியை எடுத்தீர்
வென்றீர்..!
வென்றவர் நீங்கள்
எமது பாசறைக்கு
மீண்டும் வரவில்லை
நீங்கள் மீட்ட மண்ணில்
விதையாய்ப் புதைந்தீர்..!
புதைந்த மண்ணில்
மீண்டும் எழுந்து
எமது மண்ணில்
பிறந்த புதிய
புலியாய்
மீண்டும் மீண்டும்
விழ விழ எழுவீர்கள்
எமது மண்ணில்..!

ஆக்கம் -: முகமறியா உறவு

Sunday, March 20, 2011

ஏ.... கடலே

ஏ.... கடலே
உனக்கு இரக்கமே இல்லையா?
லெமூரியா கண்டத்தை விழுங்கினாய் - பிறகு
கபாடபுரம் உன் வயிற்றுக்குள்
அடுத்து
தனுஷ்கோடி, பூம்புகார்

இன்று
எத்தனை உயிர்களை
பலி கொண்டாய்
உன் கோர தாண்டவத்தால்
பெரிய ரணகலமே ஏற்பட்டு
இருக்கிறதே

தாயற்ற பிள்ளைகள்
தந்தையற்ற குடும்பங்கள்
பிள்ளைகளைப் பறிக்கொடுத்த
பெற்றோர்கள்

அப்பப்பா....
உன் பிரளயத்தால்
கப்பல்கள் மிதந்த கடலில்
பிணங்கள் மிதந்தன
கருவாடுகள் காய்ந்த கடற்கரையில்
மனிதர்களின் எலும்புகூடுகள்

ஏ....கடலே
நீ ஆடி முடித்து விட்டாய்
ஆழிப் பேரலையை
வீசி அழித்துவிட்டாய்
அடங்கியதா உன் பசி

ஏ.... கடலே
நீ
சரித்திரத்தை மாற்றக்
கற்றுக்கொண்டது  எப்போது?

இவ்வளவு நாட்களாய்
மனிதர்களுக்கு
மீன்களை உணவாக்கினாய் - இன்று
மீன்களுக்கு
மனிதர்களை உணவாக்கினாய்

தரையை கடலாக்கினாய்
கடலை தரையாக்கினாய்

ஏ.... கடலே
நீ தொடுத்த போரில்
உன்னை எதிர்த்தவர்கள் யார்?
எங்கள் அணு ஆயுதமும்
அறிவியல் தொழில் நுட்பமும்
உனக்கு முன்னாள் வெறும் புஸ்வானம்

ஏ.... கடலே
நாங்கள் தோற்றதாக
நீ நினைத்துவிடாதே !
உன்னை எதிர்ப்பதற்கு
யுத்திகள் உருவாகிவிட்டன !

மனிதன்
சந்திரனை தொட்டான்
செவ்வாய்க்கு செயற்கைக் கோள்
அனுப்பினான்
ஆகாயத்தில்
ஆய்வுக்களங்கள் அமைத்தான்

கடலே....
நீ கையை நீட்டாதே !
உன் கையை ஓடிப்பதற்கு
காத்திருக்கிறோம்
காலம் வரும்............


-- தமிழ் மதி  

Friday, March 18, 2011

தங்கள் உயிரையே பணயம் வைத்து தங்கள் நாட்டைக் காக்கப் புறப்பட்ட ஜப்பான் மாவீரர்களான 50 பேரின் முயற்சிகளும் வெற்றி பெற அனைவரும் மனதால் வேண்டிக் கொள்ளுங்கள்.

அணு உலைகளின் வெப்பத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பணிக்கு உதவும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை 400க்கும் அதிகமாக இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அணுக்கதி வீச்சு அதிகமானதால், ஆபத்து கருதி அனைவரையும் மீளப்பெற்றுவிட்டது ஜப்பான்.

ஆனால் ஜப்பானின் அனைத்து மக்களையும் காப்பாற்ற தங்கள் உயிரையே பணயம் வைத்து மாபெரும் தியாகிகளாக 50 பேர் இப்பொழுது களத்தில் இறங்கியிருக்கின்றார்கள். இந்த ஐம்பது பேரும் நாட்டைக் காக்கும் தியாகிகளாக, தங்களுக்கு அணுக்கதிர் விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்து கொண்டே நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த 50 பேரும் இப்போ குளிர்ந்த நீரை அந்த அணுக்கதிர் மூலகத்தில் நேரடியாகக் கொட்டி குளிர வைக்க களத்தில் இறங்குகின்றனர். இது இவர்களின் சவக்குழியாகவே அமையும் என்றாலும், அவர்கள் அந்த முயற்சியில் இறங்கிவிட்டனர்.இன்னும் 48 மணிநேரத்தில் இவர்கள் மூலமாக நிலைமை கட்டுக்குள் வந்தால் ஜப்பான் தப்பும். இல்லையேல் சுடுகாடாகும்.

24 வருடங்களுக்கு முன்னர் ரஷ்யாவில் இருந்த �செர்னோபில்� (Chernobyl) நகரத்தில் நடைபெற்ற அணுவாலை வெடிப்பினால். அந்த நகரமே இன்று சுடுகாடாக காட்சியளிக்கிறது. அங்கு நடைபெற்ற அணு வெடிப்பை Super Core Melt Accident என்பார்கள். அந்த Super Core Melt Accident ஜப்பானில் இதுவரை நடைபெறவில்லை. அதற்கான காலக்கெடுவாக 48 மணிநேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தங்கள் உயிரையே பணயம் வைத்து தங்கள் நாட்டைக் காக்கப் புறப்பட்ட ஜப்பான் மாவீரர்களான 50 பேரின் முயற்சிகளும் வெற்றி பெற அனைவரும் மனதால் வேண்டிக் கொள்ளுங்கள்.

Tuesday, March 8, 2011

வடபகுதி கடல் ஊடாக தரையிறங்கும் விடுதலைப்புலிகளின் அணிகளே அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பை தளமாகக் கொண்ட "லக்பிம" வாரஏடு தனது பத்தியில் தெரிவித்துள்ளது.

வடபகுதி கடல் ஊடாக தரையிறங்கும் விடுதலைப்புலிகளின் அணிகளே அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பை தளமாகக் கொண்ட "லக்பிம" வாரஏடு தனது பத்தியில் தெரிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்கு சென்றுள்ள விடுதலைப்புலிகளின் படையணிகள், தமது ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்ததும், வடபகுதி கடற்கரை ஊடாகவே தரையிறக்கத்தை மேற்கொள்ளவுள்ளனர் என அது மேலும் தெரிவித்துள்ளது. வடபகுதி கடல் ஊடாக தரையிறங்கும் விடுதலைப்புலிகளின் அணிகளே அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளதாகப், புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழர்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளதாம். </span>
<span> </span>
<span>அதேசயம், தென் சூடானை போன்றதொரு, தீர்வை வடக்கு � கிழக்கில் கொண்டுவரவும் புலம்பெயர் தமிழ் சமூகம் முற்பட்டுள்ளது என்ற செய்திகளும் தற்போது கசிந்துள்ளதாக லக்பிம தெரிவித்துள்ளது. இந்த பணிகளுக்கான நிதி உதவிகளை புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்ந்து வழங்கியவாறு உள்ளதாகவும், விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு கிளைகள் தமது செயற்பாட்டை வேகப்படுத்தி வருகின்றன எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது. கனடாவையே விடுதலைப்புலிகள் பிரதான தளமாகப் பயன்படுத்தக்கூடும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளதாக அச் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது. </span>

விடுதலைப்புலிகளின் பல இளநிலை தளபதிகள் கனடாவுக்கு சென்றுள்ளதாக சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஊடாக தப்பிச் சென்ற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதானமாக தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் ஊடாகவே பல படையணிகள் தப்பிச் சென்றுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இரண்டு கப்பல்களில் 600 இற்கு மேற்பட்டோர் ஏற்கனவே தப்பிச் சென்றுள்ளனர் என பிற குறிப்புகள் தெரிவிப்பதாக லக்பிம தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழ் சமூகம் பல அரசியல் போராட்டங்களை முன்னெடுத்துள்ள போதும் அது ஒரு ஆயுதப் போராட்டத்தையும் விரும்புகிறது என்ற உண்மையும் வெளிச்சமாகியுள்ளதாக லக்பிம தெரிவித்துள்ளது.

எனவே அவர்கள் முதலில் கெரில்லா தாக்குதல்களை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன என்கிறது லக்பிம.

இருப்பினும் மாறுபட்ட , இல்லை நடைமுறைக்கு தற்போது சாத்தியமற்ற செய்திகளை சிங்கள ஊடகங்கள் வெளியிடுவதன் மூலம், இராணுவ நிலைகளை அகற்றுவதை தடுக்கவும், தமது பக்கத்தில் ஞாயம் இருப்பதாக காட்டிக்கொள்ளவும் வெளிநாடுகளில் குறிப்பாக கனடா போன்ற நாடுகளில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசுகளை திசை திருபவும் புலம் பெயர் தமிழ் சமூகத்தினூடகவே தாம் தகவல்களை பெற்றோம் எனக் கூறி புலம் பெயர் தமிழ் சமூகத்தினுள் பிரிவினைகளை உன்ன்டுபன்னவே இது போன்ற அறிக்கைகளை வெளியிடுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை யார் தடுத்தாலும் புலம் பெயர் தமிழ் சமூகம் இனபடுகொலை மற்றும் போர்க் குற்றங்களை கைவிட போவதில்லை.

Sunday, February 27, 2011

இரத்தத்தால் சிவந்த தமிழர் தாயகப்பகுதியில் மானத்தை விற்று வாழ நாம் ஒன்றும் மானங்கெட்ட தமிழர் அல்லர்- சங்கிலியன் படை

இரத்தத்தால் சிவந்த தமிழர் தாயகப்பகுதியில் மானத்தை விற்று வாழ நாம் ஒன்றும் மானங்கெட்ட தமிழர் அல்லர்- சங்கிலியன் படை

Friday, February 25, 2011

தேசிய தலைவரின் அண்ணா தமிழ் மக்களுக்கு நன்றி: அதிர்வின் நேர்காணல்

தமிழீழ தேசிய தலைவரின் அண்ணா, திரு.மனோகரன் அவர்கள் அதிர்வு இணையத்துக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் தனது தாயார் தேசத்தின் அன்னை பார்வதி அம்மாளின் ஈமைக் கிரிகைகளுக்கு தமது குடும்பம் ஏன் செல்லவில்லை என்பது குறித்து அவர் விளக்கியுள்ளார். மேலும் தேசத்தின் அன்னை பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வுகளை தாமாகவே முன் நின்று நடாத்திய மக்களுக்கு தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார். காணொளி இணைப்பு.

Wednesday, February 23, 2011

இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இறுதிநேரம் வரை பல நெருக்கடிகளின் மத்தியிலும் எமது தேசத்தின் பேரன்னையின் நலன் பேணலில் அக்கறையெடுத்து உறுதுணையாகச் செயற்பட்ட அனைவருக்கும் இந்நேரத்தில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு பேரன்னையின் பிரிவால் துயருறும் இவரின் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் தமிழ்பேசும் மக்கள் அனைவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Tuesday, February 22, 2011

தீயில் சங்கமமான பார்வதிஅம்மாள்! (காணொளி, பட இணைப்பு)





தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் உடல் இன்று மாலை தீயில் சங்கமம் ஆனது.

பார்வதி அம்மாளின் உடல் யாழ். வல்வெட்டித்துறை ஊரணி பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மைத்துனரான சங்கரநாராயணன் சிதைக்கு தீ மூட்டினார்.

இறுதிக் கிரியைகள் இடம்பெற்றபோது இந்தியாவின் ம.தி.மு.க. தலைவர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் நெடுமாறன், திரைப்பட இயக்குநர் சீமான், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் தொலைபேசி மூலம் இரங்கல் உரை நிகழ்த்தினர்.

Monday, February 21, 2011

புலித்தாயின் முகம் காண புலிப்பிள்ளை வருவாராம் பீதியில் ராணுவம்..........

புலித்தாயின் முகம் காண புலிப்பிள்ளை வருவாராம் பிடிப்பதற்கு இராணுவம் தயாராம் இவ்வாறு யாழ்ப்பாணத்தில் பலரிடம் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கடல்பிரதேசமும் பலத்த பாதுகாப்பில் ஈழத்தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த வரும் மக்களை திருப்பி அனுப்பும் இராணுவம். போக்குவரத்தும் தடுக்கப்படலாம், இளைஞர்கள் பலர் கைது, பதட்டத்தில் இன்று யாழ்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் மறைவையொட்டி வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் பறக்கவிடப்பட்டிருந்த கறுப்புக் கொடிகள் அனைத்தினையும் அங்கு திடீரென வந்த படையினர் அகற்றியதன் காரணமாக வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் பதற்றம் நிலவுதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு நேற்று இரவு பல இளைஞர்களை புலனாய்வுப் பிரிவினர் கடத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்ட சில இளைஞர்களே மரங்களில் ஏறி கறுப்புக்கொடிகளைக் கட்டியதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதில் சில இளைஞர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், மேலும் சிலரை இராணுவத்தினர் தடுத்துவைத்துள்ளதாகவும் இன்னும் சிலரை இராணுவம் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அன்னையின் இறப்பும் தமிழர்களை எழிச்சிகொள்ள வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசத்தாய் கண்ணீர் அஞ்சலியின்போது ஈழத்தாய் ஒருவரின்உள்ளக் குமுறல்...............

Saturday, February 19, 2011

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் காலமானார்! (பட, ஒலிப் பதிவு இணைப்பு)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் காலமானார்! (பட, ஒலிப் பதிவு இணைப்பு)


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் இன்று காலையில் யாழ்.வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் காலமானார்.

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கட்சியின் செயலாளர் நாயகமும், பார்வதி அம்மாளின் பாதுகாவலராக இருந்து வந்தவருமான முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

பார்வதி அம்மாள் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நோயால் பீடிக்கப்பட்டு இருந்தார்.

இறக்கும்போது இவருக்கு வயது-81.

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்.(படம் இணைப்பு)





தமிழீழ தேசிய தலைவரின் தாயார்: தேசத்தின் அன்னை இன்று அதிகாலை 6.30 மணிக்கு இறையடி எய்தினார். 
                       

மாவீரனை சுமந்த தமிழ் தாயை இழந்துவிட்டோம்.

ஐயோ ..ஏன் எங்களுக்கு மட்டும் இத்தகைய சோகம்......

Friday, February 18, 2011

ராஜபக்சே கொடும்பாவியை எரித்த ரஜினி ரசிகர்கள் கைது.

திருப்பூர் ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பில் தமிழக மீனவர்களை சிறை பிடித்த இலங்கை ராணுவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மன்ற பொருளாளர் ராஜா தலைமை தாங்கினார். ரசிகர்கள் கரடான்காடு – தாராபுரம் சாலையில் திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர்.
இலங்கை அரசை கண்டித்து கோசமிட்டபடியே ராஜபக்சேவின் கொடும்பாவிக்கு தீ வைத்து எரித்தனர். சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் பத்திரமாக மீட்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர். அரசியல் கட்சிகளை தொடர்ந்து ரசிகர் மன்றங்களும், மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tuesday, February 15, 2011

தமிழ் தேசிய சிந்தனையாளரும் தமிழீழ ஆதரவாளருமான புதுக்கோட்டை சு.முத்துக்குமாரை சற்று நேரத்தின் முன்னர் சிலர் வெட்டிக்கொன்றுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் முதன்மையானவராக இருந்தவர் சுப.முத்துக்குமார்.
ஈழப்போரின் கடைசி நேரத்தில் சிறீலங்கா அரசபயங்கரவாத போரினால் காயம்பட்ட மக்களுக்கு மருத்துவத்திற்கு தேவையான மருந்துப்பொருட்களை அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தனக்கடத்தல் வீரப்பனுடன் காட்டில் இருந்தவர்.   இவருக்கு தமிழ் உணர்வாளர்களுடன் அதிக உறவு உண்டு.
இவர் கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் கரு.காளிமுத்து என்பவரின் மகளை திருமணம் செய்தார்.
சமீபகாலமாக  ஈழப்பிரச்சனையில் மிகவும் தீவிரமாக செயல்பட்டுவந்தார்.     சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டுவந்தார்.
சீமான் கலந்துகொள்ளும் எந்த விழாவாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குவதில் முக்கிய பங்குவகித்தவர்.
கடந்த மாதத்தில் சீமான் உயிருக்கு சிலர் குறி வைத்திருப்பது தெரிந்ததும்,  சீமானுக்கு  பலத்த பாதுகாப்பு பணியை செய்து வந்ததும் முத்துக்குமார்தான்.
இந்த நிலையில் இன்று இரவு 10 மணிக்கு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே இவர் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்

Sunday, February 13, 2011

மாவீரர்கள் நினைவில்.........................

போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.... அறப்போரிலும் சரி ஆயுதப்போரிலும் சரி எமது விடுதலைப் போர் உலக சிகரத்தை எட்டியிருக்கின்றது. -: தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்

Friday, February 11, 2011

Monday, February 7, 2011

Sunday, February 6, 2011

பிரித்தானியாவில் தமிழீழத் தேசியக்கொடிக்கு தடையில்லை!: பிரித்தானியக் காவல்துறை

                              சிறிலங்காவின் சுதந்திரதினத்தை கறுப்பு தினமாக அறிவித்துள்ள தமிழ் மக்கள்,
இன்று புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ள சிறிலங்காவின் தூதுவராலயங்களுக்கு முன்பாக
கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
குறிப்பாக பிரான்ஸ், பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டங்களில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக அறியவருகின்றது.
இன்று பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழீழ தேசியக் கொடிக்கு
எதிராக சிறிலங்கா எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரித்தானியத்
தூதரகம் முன்பாக தமிழீழ தேசியக் கொடியுடன் பெருமளவான மக்கள்
கலந்துகொண்டிருந்தனர்.
தமிழீழத் தேசியக் கொடி தடை செய்யப்பட்டதாக பிரித்தானியக் காவல்துறைக்கு அறிவித்த சிறிலங்கா தூதுவராலயம், அதனை மக்கள் பிடித்திருப்பதை தடுக்குமாறும் கோரியிருந்துள்ளது.
இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர், தடை செய்யப்பட்ட கொடியைப் பிடிக்க
வேண்டாம் என்று வலியுறுத்தியதுடன் எல்லாவற்றையும் மடித்து வைக்குமாறு கூறியுள்ளனர்.
ஆனால் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் தமிழீழத் தேசியக் கொடி
பிரித்தானியாவில் தடை செய்யப்படவில்லை என்பதை எடுத்து விளக்கியுள்ளனர். அதன்
பின்னர் காவல்நிலையம் சென்று வந்து பதில் தெரிவிப்பதாகக் கூறிச்சென்ற
காவல்துறையினர், பின்னர் மீண்டும் அங்கு வந்து தமிழீழ தேசியக் கொடியைப்
பிடிப்பதற்கு தடை எதுவும் இல்லை என்று கூறியதுடன், மக்கள் தொடர்ந்து அதனைப்
பிடித்திருப்பதற்கும் அனுமதித்துள்ளனர்.
தமிழீழத் தேசியக் கொடியின் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்த முயன்ற
சிறிலங்கா, தனது சுதந்திர நாளில் தனது முகத்தல் தானே கரியைப்
பூசிக்கொண்டுள்ளது. அத்துடன், பிரித்தானியாவில் தமிழீழ தேசியக் கொடியைப்
பிடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் சில தமிழ்ப் பிரமுகர்களின் முகத்திலும்
இது அறைந்திருக்கும் என்றே கருதலாம்.  

சிங்கள மடத்தை தாக்கிய வழக்கில் டேவிட் பெரியார் - நேர்காணல் தமிழ் தேவன்

                                                                             

Friday, February 4, 2011

அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம்: சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பில் பிப்ரவரி இறுதியில் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் உள்ள அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் தனது தலைமையில் நடைபெறும் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விரோதமாக சித்திரவதைக் கூடங்களை நடத்துகின்றது. மேற்கண்ட இரண்டு முகாம்களும் இலங்கை கொடுங்கோலன் ராஜபக்சேவின் மீள் குடியேற்ற முகாமினை விட மோசமாக உள்ளது.

ஆடு மாடுகளை அடைக்கும் கொட்டகையை விட மிக கேவலமாக அடிப்படை வசதிகள் ஏதுமற்ற இடத்தில் அங்கு தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும் பூந்தமல்லியில் 4 தமிழர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களை சட்டத்திற்குப் புறம்பாக முகாம் என்ற பெயரில் அங்கு அடைத்து வைத்துள்ளது.

முகாம்களில் உள்ளவர்களை உறவினர்களோ, வழக்கறிஞரோ பார்க்க வேண்டும் என்றால் அரசின் அனுமதி பெற வேண்டும். அது என்றும் கிடைப்பது இல்லை.அதிலும் பூந்தமல்லி முகாம் அமைந்துள்ள இடம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை அடைத்து வைப்பதற்கான உயர் பாதுகாப்பு சிறையாக இருந்த இடமாகும். அங்கு முகாமினைச் சுற்றிலும் மதில் மேல் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. உள் இருக்கும் ஒவ்வொரு அறையும் நாஜிகளின் சித்திரவதைக்கூடம் போல் இருக்கிறது.

முகாமிற்கு மேற்கூரை என்று எதும் இல்லை. கம்பிகள் தான் வேயப்பட்டுள்ளது. கடும் வெயிலோ பெரு மழையோ, குளிரோ அப்படியே உள்ளே இருப்பவர்களைப் பாதிக்கிறது. முகாமினைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கில் காவலர்கள் மற்றும் உளவுத்துறையினர் நிறுத்தப்பட்டு அந்த இடம் பயங்கரமாகக் காட்சி அளிக்கிறது. மேலும் தமிழக அரசின். இந்த செயலானது மனித நேயத்திற்கு முற்றிலும் எதிரான செயல். சிறையை விடக் கொடுமையாக இருக்கும் இடத்தை முகாம் என்று கூறி அடைத்து வைக்க அரசுக்கு அதிகாரம் இல்லை.

தற்பொழுது பூந்தமல்லியில் உள்ள தமிழர்கள் தங்களை விடுவிக்க வேண்டும் என்ற தங்கள் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி 5 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அங்குள்ளவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கண்துடைப்பாக ஏதாவது செய்து பிரச்சனையை அரசும் அங்குள்ள அதிகாரிகளும் திசை திருப்புகின்றனர். அவர்களை விடுவிக்க மறுக்கின்றனர்.

இந்த அவல நிலை தொடராமல் இருக்க நாம் தமிழர் கட்சி சார்பில் பிப்ரவரி இறுதியில் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் உள்ள அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கத்தினர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்



03-01-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் முன்னிலையில் மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவி சமுத்திராதேவி அவர்கள் தலைமையில் 25 பேர் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, தடா, ராசா, ஆவல் கணேசன், கருப்புக்குரல் .கோ, அமுதா நம்பி,ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவிஞர் புதுவை ரத்தினதுரை ஐயா அவர்கள்...

Wednesday, February 2, 2011

தூத்துக்குடிக்கும் கொழும்ப...ுக்கும் மிடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

சிங்களத் தீவுக்கு பாரதி கட்டிய பாலமும்-வ உ சிதம்பரம் அனுப்பிய கப்பலும்! “பொய்ம்மை தீர,மெய்ம்மை நேர வருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி) “ - சுப்ரமணிய பாரதி எதிர்வரும் மாசி ( பெப்ருவரி) மாதக் கடைசியில் தூத்துக்குடிக்கும் கொழும்ப...ுக்கும் மிடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்பது உறுதியாக தெரியவந்துள்ளது. அதற்கான அறிவித்தல்கள் வெளிவரத் தொடங்கி உள்ளன.அதுவும் அந்த பயணிகளுக்கான கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்படும் கப்பலின் பெயரும் வ. உ .சி சிதம்பரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரபோராட்டத்தில் பிரித்தானியா அந்நிய ஆட்சியாளர்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் ஒன்றாக வ.உ.சி என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த வ. உ . சிதம்பரம்பிள்ளை பிரித்தானியா கப்பல்களுக்கெதிராக நடத்தி காண்பித்த சுதேசிய கப்பல் சேவையை குறிப்பிடலாம். பிரித்தானிய ஆட்சியாளர்களுக் கெதிராக கொழும்புக்கும் தூத்துக்குடிக்கு மிடையில் சுதேசிய கப்பல் சேவை நடத்தி காட்டி தமது பிரித்தானிய ஆட்சி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சி. சிதம்பரம்பிள்ளை என்பதுடன் மறுபுறம் இந்திய உப கண்டம் தழுவிய மாபெரும் சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டையும் அங்கு வாழ்ந்த தமிழரையும் கப்பலோட்டிய தமிழன் என்ற சிறப்பினை பெற்று வரலாற்றில் பதிவு செய்தவர். அன்று அவர் கொழும்புக்கு தூத்துக்குடியிலிருந்து கப்பல் விட்டபோது அக்கால கட்டத்தில் நன்கு தமிழகத்தில் அறியப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் ( இலங்கையில் தமிழர் வரிந்து கொண்ட ஆயுதம் தூக்கிய “வீரர்கள்” போலல்ல இந்த சுதந்திர வீரர்கள் ) கலந்து கொண்டு மகாகவி சுப்ரமணிய பாரதி உட்பட அந்நிகழ்வை கொண்டாடினார்கள். அந்நிகழ்வில் தமது தேச பக்தியையும் எதிர்கால சுபீட்சமிகு இந்தியாவையும் பற்றி “பாரத தேசம்” கவிதையை பாரதி பாடினார் அல்லது எழுதினார். பொதுவாகவே பாரதி தனது கவிதைகளை பாடி சொல்லும் வழக்கமுடையவர் என்பதால் அக்கவிதையை பாடியுமிருக்கலாம். இந்த கவிதையில் தான் அவர் “வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் “ என்று தொடங்கும் நீண்ட கவிதையில் மேற்குலகுக்கு கப்பல் விடுவோம் என்பதற்கப்பால் தமது நாட்டுக்கு மிக அண்மையாகவுள்ள சின்னஞ சிறிய தீவான இலங்கைக்கு பாலம் அமைக்க கூட கனவு கொண்டார். அதனால் தான் கொழும்புக்கு கப்பல் விட்ட நிகழ்வுடன் பாரதி இலங்கைக்கு பாலம் அமைக்கும் கனவினை ஒரு இந்திய ஆக்கிரமிப்பு கருத்துடன் அல்லாது இரு நாடும் இணையம் (புராண காலத்தில் -ராமாயணத்தில் – இராமன் இலங்கைக்கு கட்டிய பாலம் உட்பட்ட பகுதி சேது என்று அழைக்கப்படுகிறது ) சிதைவுற்ற தொட்டம் தொட்டமான மணற் தொடுகையான சேதுவை மேடுறுத்தி பாலமைக்க கனவு கண்டார். “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” ஆனால் பாரதியின் இந்த கவிதை முழுவதும் சுதந்திர இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வ உ.சீ யின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான (Bio-picture) கப்பலோட்டிய தமிழனில் பயன்படுத்தப்படவில்லை. அதிலும் குறிப்பாக “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்ற கவிதைப் பகுதி தவிர்க்கப்பட்டது. அவ்வரிகள் அரசியல் சம்பந்தப்பட்ட அந்த திரைப்படத்தில் அரசியல் காரணங்களுக்காகவே தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும் என்பதனையும் ஊகிக்க கூடியதாகவிருந்தது. ஆனால் அதற்கு பின்னர் தயாரிக்கப்பட்ட சமூக தமிழ் திரைப்படமான கைகொடுத்த தெய்வம் படத்தில் தான் (இரு திரைப்படங்களிலும் சிவாஜி கணேஷன் நடித்திருந்தார்). பாரதியின் பாரத தேச பாடலின் முன்னைய பாடலில் தவிர்க்கப்பட்ட கவிதை பகுதிகள் இடம் பெற்றன. “ சிந்து நதியின்மிசை நிலவினிலே” என்ற பாடலின் பகுதியாக “சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்ற கவிதை வரிகளும் அந்த திரைப்பட ( சினிமா ) பாடலின் பாடல் வரிகளாக இடம் பெற்றன. ஆக மொத்தத்தில் பாரதி கண்ட சேதுவை மேடுறுத்தம் கப்பல் கால்வாய் திட்டம் அவ்வப்போது மேலெழுந்து மீண்டும் மூழ்கி அரசியல் சர்ச்சைக்குள் அவதியுறும் ஒரு திட்டமாக -கனவாக-இருக்கிறது. ஆனால் வ.உ சி கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் கப்பல் ஒட்டி காட்டியது ஒருபுறம்மிருக்க பின்பு இலங்கையில் தலை மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் மிடையே பயணிகள் கப்பல் சேவை நடைபெற்று வந்ததும் , அது வடக்கில் ஆயுத பயங்கரவாதம் காலுன்ற தொடங்கியதும் இடை நிறுத்தப்பட்டதும் பின்னர் பல தசாப்தங்களுக்கு பின்னர் மீண்டும் இப்போது இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வட புலத்தில் இந்திய பூர்வீக திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் (திருவேங்கடம் எனும் பெயர் இலங்கை வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களால் சூட்டப்படும் பெயர் அல்ல ) இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டு அழிக்கப்பட்டு போனபின் தென் இந்திய வடபுல இலங்கை கடல் வழி சுதந்திர பயணங்கள் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சி யின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு சுதந்திர நடமாட்டத்தின் ஒரு அம்சமாகவே இக்கப்பல் கப்பல் ஒட்டிய தமிழனை நினைவூட்டி புறப்பட போகிறது. ஆனால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபணம் சில காலத்தின் பின்னர் “சிந்து நதியின்மிசை நிலவினிலே” என்ற பாடலை ஒலிபரப்புவதை அரசியல் காரணமாக தவிர்த்துக்கொண்டது. இத் தவிர்ப்பும் ஒருவேளை தமிழர் தரப்பில் “சிங்கள தீவு” என்ற பதத்தை விரும்பாத தமிழ் ஒலி பரப்பு கூட்டுத்தாபன மேல் மட்ட தமிழ் நிர்வாகிகள் தங்களின் பதவி நிலையை பயன்படுத்தி சேதுவை மேடுறுத்தி பாலமைக்க கூறும் பாடல் வரிகளை இந்திய ஆக்கிரமிப்பு சிந்தனையாக இலங்கை அரசிடம் காட்டி சிங்கள தீவு என்று இப்பாடலில் குறிப்பிடுவதை சகிக்க முடியாமல் சாமார்த்தியமாக தவிர்க்க தங்களின் அரசியலை செய்திருக்கிறார்கள் என்பதும் நோக்கற்பாலது. எனது பல்கலைக்கழக காலத்தில் ஒரு தடவை பேராதனை பொறியியல் பீட மண்டபத்தில் நடைபெற்ற ஒரு கலை விழாவில் “சிந்து நதியின்மிசை” என்ற பாரதியின் கைகொடுத்த தெய்வம் படப் பாடலை ஒரு பொறியியல் துறை மாணவர் அந்நிகழ்வில் பாடினார். அவர் அப்பாடலை பாடியபோது ““சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்ற வரிகள் வரும் இடத்தில் “தமிழீழத்திற்கோர் பாலம் அமைப்போம்” என்று பாடி தமிழ் மாணவர்களின் பலத்த கரகோசத்தை பெற்றார். அதுவே சிங்களதீவின் மீதான எதிர்பினை கோடிட்டு காட்டியதுடன் அங்கு அக் காலகட்டத்தில் பல்கலைக் கழக சூழலில் நிலவிய தமிழ் இளைஞர்களின் தமிழர் விடுதலை கூட்டணி ஊட்டி வளர்த்த பிரிவினைவாதமும் ஜே வீ பியின் -ரோகன விஜேவீரவின்- தீவிரவாதமும் சமகாலத்தில் தளம் கொண்ட ஒரு காலகட்டத்தில் தான் அது நடந்தது. என்னவானாலும் பாரதி மீது தமிழ் தேசிய வாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் சிங்கள தீவு என்று கூறியதில் சொல்லொணா ஆத்திரமுண்டு . ஆனால் என்ன செய்வது பாரதியை , அதுவும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் கவிஞனாக புகழப்படும் மகாகவி பாரதியை எப்படி விமர்சிப்பது, ஆகவே சிங்களதீவு என்று பாரதி குறிப்பிட்டதை ஒருபுறம் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர். ஆனாலும் ஒரு புலி ஊடகவியலாளர் சில வருடங்களுக்கு முன்பு இலண்டனில் உள்ள சன் ரைஸ் வானொலியில் பாரதி குறிப்பிட்ட சிங்களத்தீவு யாழ்ப்பாணத்தை -அதாவது குடாநாட்டை- குறிப்பிடவில்லை ஏனெனில் பாரதிக்கு குடாநாடு தமிழ் தேசம் என்று தெரிந்திருந்தது என்று குறிப்பிட்டதுடன் ( கிழக்கையும் மலையக மக்கள் , மேலும் சேது சமுத்திரம் தலை மன்னாரைதான் இணைக்கிறது என்பதயும் சவுகரியமாக மறந்து ) ஒரு புதிய விளக்கம் சொல்ல முற்பட்ட பேதமையை கேட்டேன் . சரி அது போகட்டும் என்றால் பாரதி சுதந்திர இந்தியாவை காணாமல் அகால மரணமடையாமல் வாழ்ந்திருக்கக் கூடாதா என்ற அங்கலாய்ப்பும் தமிழ் தேசியவாதிகளுக்கும் பிரிவினை வாதிகளுக்கும் இருந்திருக்கலாம் அல்லது இருக்கலாம். ஒரு விவாதத்துக்கு அவர் வட்டுக்கோட்டை தீர்மான காலகட்டம் வரையாவது வாழ்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால் ,செல்வநாயகம் அமிர்தலிங்கம் போன்ற பிரகிருதிகள் அவரை ஒரு வழிபண்ணி “ஈழத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்று வேறு ஒரு கவிதை எழுத வைத்திருப்பார்கள். அல்லது மாறாக பாரதி அவ்வாறான கோரிக்கை விடுக்கப்படு மிடுத்து ஆத்திரமுற்று ‘ பாண்டியா ! என்னை என்னவென்று நினைத்தாய் ” (பாரதி ஆக்ரோஷம் கொள்ளும்போது பாண்டியா என்றுதான் தன்னோடு சம்பாசிப்பவரை அழைப்பாராம் ) என்று கர்சித்திருப்பார். அதுதான் போகட்டும் என்று விட்டால் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு தமிழ் பாடகர் ஐரோப்பாவிலிருந்து இயங்கும் தமிழ் வானொலியொன்றில் “சிந்து நதியின்மிசை” பாட்டை அபாரமாக பாடி அப்பாட்டின் சிங்களதீவு எனவருமிடத்தில் “சுந்தர தீவினுக்கோர் பாலமமைப்போம்” என்று பாடி வைத்தார். சுந்தரத் தீவு என்று பாடினால் ஆகக்குறைந்தது சந்தமாவது பொருத்தமாக அமையும் .பாரதியின் கவிதை வரியினை மாற்ற முனைந்த , முனையும் தமிழ் தீவிர அரசியல் நோக்கு ஒருபுறமிருக்க சுந்தரத் தீவு என்று குறிப்படுவது அழகிய தீவு என்று நன்றாக பொருள்படும் என்பதுடன் “பரடைஸ் ஐலன்ட்” (Paradise Island) எனும் சொர்க்கத் தீவுக்கு நெருக்கமான சொல்தானே!. பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டதனால் இலங்கை ஒரு சுதந்திர தீவும் தானே!!!. எப்படியாயினும் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைக்கும் தூத்துக்குடியை சேர்ந்த பாரதியின் கனவும் வெறும் கனவல்ல மெய்ப்படவேண்டிய பிரார்த்தனைக் கனவு. தூத்துக்குடியை சேர்ந்த கப்பலோட்டிய தமிழன் வ உ சி யின் கப்பல் பயணங்களும் வெறுமனே ஒரு சரித்திர சம்பவமல்ல மாறாக திவாலாகிப்போன அவரின் கப்பல் கொம்பனியை விட அவரின் பெயரிலே உள்ள கப்பலில் பயணங்கள் செய்வதன் மூலம் அவரின் பெயரை சாதாரண மக்களின் வாய்களில் உச்சரிக்கப் பன்னபோகும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் இது. தென்னாசியாவில் இணைவு பெறும் புதிய பொருளாதர பரஸ்பர நலன்கள் மேவிய பயன்கள் இவ்விரு நாடுகளையும் இன்னமும் இறுக்கமாக இணைக்கலாம் சேதுவை மேடுறுக்கலாம் வ உ சியின் கப்பல்கள் தமிழனின் கப்பல் வரலாற்றை நினைவுறுத்தி பயணிகளை இன மத மொழி வேறுபாடின்றி சுமந்தே இணைக்கலாம்மேலும் பார்க்க

ஒருத்தனை கொன்று மற்றவனை விட்டால் தான் பிரச்சனை என்று எல்லோரையும் கொன்றுவிட்டானா சிங்களன் ?

நாகப்பட்டினம்  நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் படகுடன் மாயமானதைத் தொடர்ந்து, இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தேடி வருகின்றனர்.நாகை, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆறு பேர், கடந்த 28ம் தேதி நள்ளிரவு, நாகை துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் கரை திரும்ப வேண்டியவர்கள், இன்று வரை திரும்பாததால், அக்கரைப்பேட்டை மீனவர்கள் நேற்று காலை நாகை மீன்வளத் துறையினரிடம் புகார் அளித்தனர்.மீன்வளத் துறையினர் இந்திய கடற்படையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சென்னை மற்றும் மண்டபம் கடற்படை முகாமில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடும் பணி துவங்கியுள்ளது.மீனவர்கள், காற்றின் திசைமாறி வேறு பகுதிக்கு சென்று விட்டார்களா அல்லது இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனரா என தகவல் தெரியாத நிலையில், நாகை மாவட்ட மீனவ கிராமங்களில் சோகம் ஏற்பட்டுள்ளது.இலங்கை கடற்படையினரை கண்டித்து, நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்களத்தின் சுதந்திர தினம்

சிங்களத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்தும்,அக்கிய நாட்டின் பொதுச்செயலாளர் பன் கி மூனின் பேர்லீன் வருகையை முன்னிட்டு தமிழீழ மக்களுக்கு நீதி கோரி யேர்மனி பேர்லீன் நகரில் எதிர்வரும் 04.02.2011 காலை 9.30 மணியிலிருந்து 11.30 மணிவரை கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதென்று யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசின் "தமிழீழ தேசிய அட்டை" அறிமுக விழாவும், முத்துக்குமாரின் 2-ம் ஆண்டு நினைவு நிகழ்வும்.














நாடுகடந்த தமிழீழ அரசின் தேசிய அட்டை அறிமுக விழாவும், முதல்கட்ட விநியோகமும் நாடுகடந்த தமிழீழ அரசினால் பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தியாகப் பேரொளி முத்துக்குமாரன் நினைவு வணக்கமும் இடம்பெற்றது.
கடந்த சனிக்கிழ்மை 29-01-2011 அன்று மாலை 7 மணிக்கு லண்டன் பிறண்ட் ஹோலில் நடைபெற்ற இந்த வரலாற்று சிறப்பு நிகழ்வில் பிறண்ட் நகரசபை உறுப்பினர் உட்பட தமிழ் அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் என பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மங்கள விளக்கை மாவீரரான கப்டன் இளையவளின் சகோதரன் திரு. குமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழ மக்களுக்காக தன்னை தீக்கிரையாக்கி உலகிற்கு உரத்துக் கூறிய உயர்ந்த மனிதனாக உலகத் தமிழர்கள் நெஞ்சங்களில் குடிகொண்டுள்ள தியாகப் பேரொளி முத்துக்குமார் அவர்களுக்கான நினைவுவணக்க நிகழ்வு முதல் நிகழ்வாக இடம்பெற்றது.
தியாகப் பேரொளி முத்துக்குமார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசின் பெண்கள் மற்றும் முதியோர் நலன் பேணல் அமைச்சர் திருமதி. பாலம்பிகை முருகதாஸ் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.