தமிழீழம்,

தமிழீழம்,

Wednesday, February 2, 2011

நாடுகடந்த தமிழீழ அரசின் "தமிழீழ தேசிய அட்டை" அறிமுக விழாவும், முத்துக்குமாரின் 2-ம் ஆண்டு நினைவு நிகழ்வும்.














நாடுகடந்த தமிழீழ அரசின் தேசிய அட்டை அறிமுக விழாவும், முதல்கட்ட விநியோகமும் நாடுகடந்த தமிழீழ அரசினால் பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தியாகப் பேரொளி முத்துக்குமாரன் நினைவு வணக்கமும் இடம்பெற்றது.
கடந்த சனிக்கிழ்மை 29-01-2011 அன்று மாலை 7 மணிக்கு லண்டன் பிறண்ட் ஹோலில் நடைபெற்ற இந்த வரலாற்று சிறப்பு நிகழ்வில் பிறண்ட் நகரசபை உறுப்பினர் உட்பட தமிழ் அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் என பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மங்கள விளக்கை மாவீரரான கப்டன் இளையவளின் சகோதரன் திரு. குமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழ மக்களுக்காக தன்னை தீக்கிரையாக்கி உலகிற்கு உரத்துக் கூறிய உயர்ந்த மனிதனாக உலகத் தமிழர்கள் நெஞ்சங்களில் குடிகொண்டுள்ள தியாகப் பேரொளி முத்துக்குமார் அவர்களுக்கான நினைவுவணக்க நிகழ்வு முதல் நிகழ்வாக இடம்பெற்றது.
தியாகப் பேரொளி முத்துக்குமார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசின் பெண்கள் மற்றும் முதியோர் நலன் பேணல் அமைச்சர் திருமதி. பாலம்பிகை முருகதாஸ் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

No comments:

Post a Comment