தமிழீழம்,

தமிழீழம்,

Monday, February 21, 2011

புலித்தாயின் முகம் காண புலிப்பிள்ளை வருவாராம் பீதியில் ராணுவம்..........

புலித்தாயின் முகம் காண புலிப்பிள்ளை வருவாராம் பிடிப்பதற்கு இராணுவம் தயாராம் இவ்வாறு யாழ்ப்பாணத்தில் பலரிடம் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கடல்பிரதேசமும் பலத்த பாதுகாப்பில் ஈழத்தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த வரும் மக்களை திருப்பி அனுப்பும் இராணுவம். போக்குவரத்தும் தடுக்கப்படலாம், இளைஞர்கள் பலர் கைது, பதட்டத்தில் இன்று யாழ்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் மறைவையொட்டி வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் பறக்கவிடப்பட்டிருந்த கறுப்புக் கொடிகள் அனைத்தினையும் அங்கு திடீரென வந்த படையினர் அகற்றியதன் காரணமாக வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் பதற்றம் நிலவுதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு நேற்று இரவு பல இளைஞர்களை புலனாய்வுப் பிரிவினர் கடத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்ட சில இளைஞர்களே மரங்களில் ஏறி கறுப்புக்கொடிகளைக் கட்டியதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதில் சில இளைஞர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், மேலும் சிலரை இராணுவத்தினர் தடுத்துவைத்துள்ளதாகவும் இன்னும் சிலரை இராணுவம் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அன்னையின் இறப்பும் தமிழர்களை எழிச்சிகொள்ள வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment