தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் இன்று காலையில் யாழ்.வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் காலமானார்.
தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கட்சியின் செயலாளர் நாயகமும், பார்வதி அம்மாளின் பாதுகாவலராக இருந்து வந்தவருமான முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
பார்வதி அம்மாள் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நோயால் பீடிக்கப்பட்டு இருந்தார்.
இறக்கும்போது இவருக்கு வயது-81.
No comments:
Post a Comment