தமிழீழம்,

தமிழீழம்,

Wednesday, February 2, 2011

ஒருத்தனை கொன்று மற்றவனை விட்டால் தான் பிரச்சனை என்று எல்லோரையும் கொன்றுவிட்டானா சிங்களன் ?

நாகப்பட்டினம்  நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் படகுடன் மாயமானதைத் தொடர்ந்து, இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தேடி வருகின்றனர்.நாகை, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆறு பேர், கடந்த 28ம் தேதி நள்ளிரவு, நாகை துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் கரை திரும்ப வேண்டியவர்கள், இன்று வரை திரும்பாததால், அக்கரைப்பேட்டை மீனவர்கள் நேற்று காலை நாகை மீன்வளத் துறையினரிடம் புகார் அளித்தனர்.மீன்வளத் துறையினர் இந்திய கடற்படையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சென்னை மற்றும் மண்டபம் கடற்படை முகாமில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடும் பணி துவங்கியுள்ளது.மீனவர்கள், காற்றின் திசைமாறி வேறு பகுதிக்கு சென்று விட்டார்களா அல்லது இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனரா என தகவல் தெரியாத நிலையில், நாகை மாவட்ட மீனவ கிராமங்களில் சோகம் ஏற்பட்டுள்ளது.இலங்கை கடற்படையினரை கண்டித்து, நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment