தமிழீழம்,

தமிழீழம்,

Friday, February 18, 2011

ராஜபக்சே கொடும்பாவியை எரித்த ரஜினி ரசிகர்கள் கைது.

திருப்பூர் ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பில் தமிழக மீனவர்களை சிறை பிடித்த இலங்கை ராணுவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மன்ற பொருளாளர் ராஜா தலைமை தாங்கினார். ரசிகர்கள் கரடான்காடு – தாராபுரம் சாலையில் திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர்.
இலங்கை அரசை கண்டித்து கோசமிட்டபடியே ராஜபக்சேவின் கொடும்பாவிக்கு தீ வைத்து எரித்தனர். சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் பத்திரமாக மீட்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர். அரசியல் கட்சிகளை தொடர்ந்து ரசிகர் மன்றங்களும், மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment