தமிழீழம்,

தமிழீழம்,

Tuesday, August 31, 2010

"என்னைப் படிக்க வையுங்கள். எனது அண்ணாமாரை கண்டு பிடித்து தாருங்கள்." இப்படி உருக்கமாக இறைஞ்சுகின்றார் கிளிநொச்சி மாவட்டத்தின் புதுமுறிப்புக் கிராமத்தைச் சேர்ந்த சுகிர்தா ஸ்ரீஸ்கந்தராஜா என்கிற சிறுமி. வயது 14. தற்போது தரம் 10 இல் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் படிக்கின்றார். கடந்த வருடம் யுத்த இடப் பெயர்வின்போது காணமல் போன அண்ணன்மார். வயதான அப்பா. அப்பாவுக்கு வேலை இல்லை. மன ரீதியாகவும் குழம்பிப் போயுள்ள பெற்றோர். இத்தனை இன்னல்கள் இவரைச் சுற்றி நிற்க ஆட்டோவில்தான் பள்ளிக்கு சென்று வருகின்றார் இச்சிறுமி. மாதம் 1000 ரூபா வரை இப்போக்குவரத்துச் செலவு. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி பிள்ளையை ஆட்டோவில்தான் அனுப்பி வைக்க வேண்டும் என்கிற நிலை பெற்றோருக்கு. அரசின் உதவியும் இல்லை. அரச சார்பற்ற நிறுவனங்களின் மனிதாபிமானமும் இல்லை.வெளிநாட்டு நிதியும் இல்லை. அப்படியாயின் இந்த பிஞ்சு ஏன் பாடசாலைக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும்?. அவருடைய கால்கள் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது எறிகணைத் தாக்குதலில் சிக்கி விட்டன. ஒரு கால் முழங்காலுடன் துண்டாடப்பட்டு விட்டது. மற்றக் காலிலும் பாதிப்பு. ஆனால் கல்வி கற்று பெரிய நிலைக்கு வருவேன் என்கிற சபதத்தில் அச்சிறுமி.

* “வந்த ஊரில் வாழ்வை தொலைப்பதை விடசொந்த ஊரின் சுடலையில் எரிவதேமேல்…!!!

“‘’ நீ புகுந்த நாட்டில் எவ்வளவு வசதிகளோடு வாழ்ந்தாலும் ஒருபோதும் அந்த நாடு உன் சொந்த நாடாக மாறாது. அது நீ இறக்கப்போகும் ஒரு நாடாகவே இருக்கும். உன் பிறந்த நாடுதான் உன் சொந்த நாடு” “

போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.

வரலாற்றில் பிரபாகரன்

தமிழர்களோடு கதைத்துக்கொண்டிருந்துவிட்டு, பிரிகின்ற போது…”மீண்டும் தமிழீழத்தில் சந்திப்போம்” என்ற பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவருவோம். அப்போது தான் நாங்கள் ஒவ்வொருவரும் தமிழீழத்தை நினைத்துக்கொண்டிருக்க முடியும். இன்றே தொடங்குங்கள…இந்தப் பழக்கத்தை…தமிழர்களோடு கதைத்துக்கொண்டிருந்துவிட்டு, பிரிகின்ற போது…”மீண்டும் தமிழீழத்தில் சந்திப்போம்” என்ற பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவருவோம். அப்போது தான் நாங்கள் ஒவ்வொருவரும் தமிழீழத்தை நினைத்துக்கொண்டிருக்க முடியும். இன்றே தொடங்குங்கள…இந்தப் பழக்கத்தை…