தமிழீழம்,

தமிழீழம்,

Tuesday, March 8, 2011

வடபகுதி கடல் ஊடாக தரையிறங்கும் விடுதலைப்புலிகளின் அணிகளே அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பை தளமாகக் கொண்ட "லக்பிம" வாரஏடு தனது பத்தியில் தெரிவித்துள்ளது.

வடபகுதி கடல் ஊடாக தரையிறங்கும் விடுதலைப்புலிகளின் அணிகளே அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பை தளமாகக் கொண்ட "லக்பிம" வாரஏடு தனது பத்தியில் தெரிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்கு சென்றுள்ள விடுதலைப்புலிகளின் படையணிகள், தமது ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்ததும், வடபகுதி கடற்கரை ஊடாகவே தரையிறக்கத்தை மேற்கொள்ளவுள்ளனர் என அது மேலும் தெரிவித்துள்ளது. வடபகுதி கடல் ஊடாக தரையிறங்கும் விடுதலைப்புலிகளின் அணிகளே அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளதாகப், புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழர்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளதாம். </span>
<span> </span>
<span>அதேசயம், தென் சூடானை போன்றதொரு, தீர்வை வடக்கு � கிழக்கில் கொண்டுவரவும் புலம்பெயர் தமிழ் சமூகம் முற்பட்டுள்ளது என்ற செய்திகளும் தற்போது கசிந்துள்ளதாக லக்பிம தெரிவித்துள்ளது. இந்த பணிகளுக்கான நிதி உதவிகளை புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்ந்து வழங்கியவாறு உள்ளதாகவும், விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு கிளைகள் தமது செயற்பாட்டை வேகப்படுத்தி வருகின்றன எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது. கனடாவையே விடுதலைப்புலிகள் பிரதான தளமாகப் பயன்படுத்தக்கூடும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளதாக அச் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது. </span>

விடுதலைப்புலிகளின் பல இளநிலை தளபதிகள் கனடாவுக்கு சென்றுள்ளதாக சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஊடாக தப்பிச் சென்ற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதானமாக தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் ஊடாகவே பல படையணிகள் தப்பிச் சென்றுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இரண்டு கப்பல்களில் 600 இற்கு மேற்பட்டோர் ஏற்கனவே தப்பிச் சென்றுள்ளனர் என பிற குறிப்புகள் தெரிவிப்பதாக லக்பிம தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழ் சமூகம் பல அரசியல் போராட்டங்களை முன்னெடுத்துள்ள போதும் அது ஒரு ஆயுதப் போராட்டத்தையும் விரும்புகிறது என்ற உண்மையும் வெளிச்சமாகியுள்ளதாக லக்பிம தெரிவித்துள்ளது.

எனவே அவர்கள் முதலில் கெரில்லா தாக்குதல்களை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன என்கிறது லக்பிம.

இருப்பினும் மாறுபட்ட , இல்லை நடைமுறைக்கு தற்போது சாத்தியமற்ற செய்திகளை சிங்கள ஊடகங்கள் வெளியிடுவதன் மூலம், இராணுவ நிலைகளை அகற்றுவதை தடுக்கவும், தமது பக்கத்தில் ஞாயம் இருப்பதாக காட்டிக்கொள்ளவும் வெளிநாடுகளில் குறிப்பாக கனடா போன்ற நாடுகளில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசுகளை திசை திருபவும் புலம் பெயர் தமிழ் சமூகத்தினூடகவே தாம் தகவல்களை பெற்றோம் எனக் கூறி புலம் பெயர் தமிழ் சமூகத்தினுள் பிரிவினைகளை உன்ன்டுபன்னவே இது போன்ற அறிக்கைகளை வெளியிடுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை யார் தடுத்தாலும் புலம் பெயர் தமிழ் சமூகம் இனபடுகொலை மற்றும் போர்க் குற்றங்களை கைவிட போவதில்லை.

No comments:

Post a Comment