தமிழீழம்,

தமிழீழம்,

Tuesday, May 3, 2011

கனடாவில் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ராதிகா சிற்சபைஈசன் வெற்றி பெற்று பாராளுமன்று செல்லும் முதல் தமிழராகத் இடம்பெற்றுள்ளார்...

கனடாவில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் கண்சவெட்டிவ் கட்சி பெரும்பாண்மை அரசை அமைத்துள்ளது. இத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ராதிகா சிற்சபைஈசன் வெற்றி பெற்று பாராளுமன்று செல்லும் முதல் தமிழராகத் இடம்பெற்றுள்ளார் 
இரண்டு ஆண்டுகளின் முன் எம் மக்கள் கொத்துகொத்தாய் கொல்லப்பட நாங்கள் ஒரு லட்சம் தமிழர்கள் கனடிய நாடாளுமன்றத்தின் முன் திரண்டு அழுதோம். கதறினோம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட வெளியே வந்தும் பார்க்கவில்லை. இன்று இம்மாதம் முள்ளிவாய்க்கால் மனிதப...் பேரவலத்தின் இரண்டாம் ஆண்டினை நினைவுகூரும் தருணம் எங்களில் ஒருவரே நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது மகிழ்வைத் தருகிறது. ராதிகாவின் வெற்றி கனடியத் தமிழர்களின் ஒற்றுமை உணர்வின் வெற்றி.....

No comments:

Post a Comment